×

திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்ற 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ்..!!

திருப்பூர்: திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்ற 4 பேரை கைது செய்து போலீஸ் சிறையில் அடைத்தது. மங்களம் சாலையில் போலீசாரின் வாகன சோதனையில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர். சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் எடை அதிகமாக இருந்த பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பொட்டலங்களை சோதனையிட்டபோது மாட்டுச் சாணத்தை கலந்து கஞ்சா விற்றது அம்பலமானது. எடை அதிகமாக இருப்பதுபோல் காட்டுவதற்காக கஞ்சாவுடன் மாட்டுச் சாணத்தை கலந்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்ற 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Mangalam Road ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி